அதிகரிக்கும் பாதாள உலக குழுக்களின் அச்சுறுத்தல்கள்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நேற்று இடம்பெற்ற படுகொலைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நீதிபதி முன்னிலையில் பாதுகாப்புத் தரப்பினர் சூழ்ந்திருக்கத்தக்கதாக இந்தப் படுகொலை அரங்கேறியிருக்கிறது. பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பாதாள உலகத் தலைவனாகிய கனேமுல்ல சஞ்சீவவே இச் சம்பவத்தில் கொல்லப்பட்ட போதிலும், நாட்டின் நீதிமன்றத்தினுள் நடந்த இந்தச் சம்பவம் எந்தளவு தூரம் பாதாள உலகக் குழுக்கள் துணிகரமாக இயங்குகின்றன என்பதை வெளிப்படுத்தி நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *