மற்றுமொரு அமைச்சரும் பதவிவிலக தயார்! அமைச்சரவை மாற்றங்களில் கடும் அதிருப்தி

வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க பதவி விலக ஆயத்தமாகி வருவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்த அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பில் சீ.பி. ரட்நாயக்க கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் சீ.பி. தனது அமைச்சின் பொருட்களைக் கூட எடுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் தமக்கு வழங்கப்பட்ட அமைச்சின் ஊடாக எதனையும் செய்ய முடியாதிருந்த அமைச்சர், புதிய அமைச்சரவை மாற்றத்தில் வேலை செய்யக்கூடிய அமைச்சுப் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நுவரெலியா மாவட்டத்தின் சக நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு நல்ல அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமையினால் சீ.பி. ரட்நாயக்க கடும் அதிருப்தி அடைந்துள்ளார்.

இதன்படி, அநேகமாக அமைச்சர் சீ.பி. ரட்நாயக்க இன்றைய தினம் தனது பதவியை ராஜினாமா செய்வார் என தெற்கு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *