
கொழும்பு, மார்ச் 04
தமிழர்களாகிய நாம் பழிவாங்கலை நாடவில்லை. மாறாக பொறுப்புக் கூறல், நல்லிணக்கம், மீள்நிகழாமை மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் தடுக்கப்படுகின்றமை போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றோம் என வலியுறுத்துகிறோம். உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது.
“இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கைக்கான இலங்கை அரசின் பதில் அறிக்கையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் இவ்விடயம் தொடர்பில் சில முக்கிய காரணிகளை குறிப்பிடுவது முக்கியமானதாகும்’ என்று தெரிவித்து சம்பந்தன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதன் முழு விவரம் வருமாறு:- சிறப்பு நிபுணர் குழுவின் அறிக்கையில், குறிப்பாக இறுதி யுத்த கட்டத்தில் நம்பத்தகுந்த சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றன எனவும் அவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை உறுதி செய்யப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையாளரின் உள்ளக விசாரணையும் இதனை யொத்த ஒரு முடிவிற்கு வந்துள்ளது.
இலங்கையின் தற்போதுள்ள அரசாங்கமும் முன்னைய அரசாங்கங்களும் இதுவரை எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்கவில்லை. முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த பொறுப்புக் கூறலை உறுதி செய்யும் வகையிலான கலப்பு பொறிமுறை அடங்கிய இணை அனுசரணை பிரேரணையிலிருந்து தற்போதைய அரசாங்கமானது விலகிக் கொண்டது கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒட்டு மொத்த பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்தவில்லை.
இலங்கை அரசாங்கமானது சுதந்திரம் அடைந்தது முதல் நீண்டகாலமாக ஆழ மான தண்டனை விலக்குக் கலாச்சாரத் தில் ஊறியுள்ளது. இது தமது அரசியல் பலத்தை தொடர்ந்தும் தக்க வைப்பதற்காக – சிங்கள, பெளத்த பேரினவாதத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக – உள்ளக வாக் குறுதிகளை மதிக்காமலும், அதன் விளை வாக கொடுத்த வாக்குறுதிகளை செயல் படுத்துவதிலும் சரியான முடிவுகளை எடுப்பதிலும் அல்லது வேறெந்த ஒரு விடயத்திலும் தீர்மானம் எடுக்கும் நிலைகளில் தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. எல்லா அரசாங்கங்களும் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதற்காக பேரினவா தத்தினை ஆதரிக்கும் கொள்கைகளை முன்னிறுத்தி வந்துள்ளனர். இது, இலங்கை நாட்டிற்கு பாரிய பாதகங்களை கொண்டு வந்துள்ளதுடன் ஒருமித்த இலங்கை நாட்டின் மக்களையும் இது பாதித்துள்ளது.
உண்மை நிலைமையை சிங்கள பெளத்த மக்களிற்கு எடுத்து கூறினால் அவர்கள் நிலைமையை புரிந்து கொள்வார்கள், ஆனால் ஒரு சில சிங்கள தலைவர்களை விட ஏனையவர்களிற்கு இதனை செய் வதற்கு தைரியம் இல்லை. இலங்கை முகங்கொடுத்துள்ள வரலாறு காணாத பிரச்சினைக்கும் மீண்டெழுந்து வரமுடி யாத நிலைமைக்கும் இதுவே பிரதான காரணமாகும் இதேவேளை ஆயுதமேந்தாத பாதிப்பிற்குள்ளான தமிழ் மக்களின் நிலைமையை குறிப்பிடுவது முக்கியமானதாகும். இவர்கள் யுத்தத்தினால் பாதிப்பிற் குள்ளானவர்கள். ஏனையோர் பாதிப் பிற்குள்ளாக்கப்பட்டவர்கள். ஏனையவர்கள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த வர்கள். மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டு பாதிப் படைந்த இந்த மக்கள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நடை முறைப்படுத்த வேண்டுகிறார்கள்.
இவர்கள் பழிவாங்கலை நாடவில்லை. மாறாக பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மீள்நிகழாமை, மற்றும் தொடரும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாமல் தடுக்கப்படுகின்றமை போன்றவற்றை உறுதி செய்யுமாறே வேண்டுகின்றனர். அவர்கள் உண்மை நிலைநாட் டப்படவேண்டும் எனக் கோருகின்றனர். உண்மை உறுதி செய்யப்படாமல் நீதி நிலைநாட்டப்பட முடியாது. இலங்கை ஐக்கிய நாடுகளின் சர்வதேச உடன்படிக்கைகளை ஏற்று கொண்டுள் ளது. அத்தகைய உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவது இலங்கையின் பொறுப்பாகும். இதனை செய்ய தவறுவதானது தற் போது நிலவும் தண்டனை விலக்கை உறுதி செய்வதாகவே அமையும். தற்போதைய இலங்கை அரசாங்கத் தின் நிலைப்பாடும், ஐக்கிய நாடுகள் சபை யின் பிரேரணை மற்றும் சர்வதேச சமூ கத்தின் நடவடிக்கைகள் போன்றன இலங்கையில் எது நடந்தாலும் அது ஒரு உள்ளக நிகழ்வாகவும், இறையாண்மை தொடர்பான விடயமாகவும் அதில் வெளித் தலையீடுகள் இருக்க முடியாது எனவும் எண்ணுவதற்கு தூண்டுகிறது.
இலங்கையின் தண்டனை விலக்குக் கலாச்சாரமானது சர்வதேச மட்டத்திற்குக் கொண்டுசெல்ல வேண்டிய தருணத்தை எட்டியுள்ளது. சொந்த மக்களது இறையாண்மை மதிக்கப்பட்டு, அவர்கள் சுய மரியாதை மற்றும் கெளரவம், சமத்துவம் மற்றும் நீதி, மேலும் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களில் இருந்து பாதுகாக்கப்படுகின்ற போதுதான் ஒரு நாட்டின் இறையாண்மை புனிதத் துவம் பெறுகின்றது என்பதனை குறிப்பிட வேண்டும். ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் இத்தகைய நிலைமை இல்லாத நிலையில் அரைவாசிக்கும் மேலதிகமானவர்கள் கடந்த தசாப்தங்க ளில் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ள னர். இந்நிலைமை தொடர்ந்தால், செழுமை யான மொழியையும், கலாச்சாரத்தினை யும், நாகரிகத்தினையும், பாரம்பரியத்தி னையும் கொண்ட தமிழ் மக்கள் இலங் கையில் இல்லாமல் போய்விடுவார்கள்.
தமிழ் மக்கள் தமது பூர்வீகமான வடக்கு கிழக்கு பிரதேசங்களில் ஒன்றிணைந்த, பிரிவுபடாத இலங்கையில்,அர்த்தமுள்ள அதிகார பிரயோகத்துடன் தொடர்ந்தும் வாழ விரும்புகிறார்கள். இது உறுதி செய் யப்படவேண்டியது அடிப்படையாகும். தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இந்த நிலைமைக்கு தமீழீழ விடுதலைப் புலி களே காரணம் என கூறுகின்றனர். ஆனால், சுதந்திரத்திற்குப் பின்னர் தமிழ் மக்களிற் கெதிரான கலவரங்கள் இடம்பெறாமல் இருந்திருந்தால், தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு படையினர் பாதுகாத்திருந்தால், இலங்கை பிரதமர்களிற்கிடையிலும் தமிழ் தலை வர்களிற்கிடையிலும் ஏற்படுத்தப்பட்ட ஒப் பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், தமிழ் மக்களின் சார்பில் தமீழீழ விடு தலைப் புலிகள் தோன்றியிருக்கமாட்டார் கள் என்பதனை குறிப்பிட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபைக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இது தொடர்பில் ஒரு பொறுப்பு உள்ளது. சமாதானமும் மீளநிகழாமையும் இந்த விடயங்கள் யதார்த்தமாக தீர்க்கப் படவேண்டும் என வலியுறுத்துகின்றன. – என்று உள்ளது