
நாட்டில் பிரிவினையை தோற்றுவிக்கக்கூடிய இனவாதம் மற்றும் மத அடிப்படைவாதம் என்பன மேலோங்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (24) ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின் அமர்வில் இலங்கை சார்பில் உரையாற்றும்போதே வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டார்.