
தற்போதைய ஆட்சியாளர்கள் அவர்களுடைய தலைவர் ரோஹன விஜயவீரவின் நினைவாக “மஹவிரு தின’ என்பதை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகின்றார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நினைவாக தமிழ் மக்கள் தரப்பில் ஒவ்வொரு வருடமும் நவம்பர் 26ஆம் திகதி “மாவீரர் தினம்” அனுஷ்டிக்கின்றது. ஆனால் “இஸ்லாத்தின் பெயரால்” நடந்த பயங்கரவாதத்தில் மரணித்தவர்களின் ஜனாஸாக்களை கூட முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை. நாங்கள் அவர்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகின்ற விடயத்தைக் கூட செய்யவில்லை. இதனை இந்த ஆட்சியாளர்களும் பெரும்பான்மை சமூகத்தினரும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டார்.