பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவதற்கான 35 வழிமுறைகள்

பெரு­நாட்கள் அல்­லது பண்­டி­கைகள் அரபு மொழியில் “ஈத்” என அழைக்­கப்­ப­டு­கின்­றன. ஈத் என்றால் மீண்டும் மீண்டும் வருதல் என்ற கருத்தை கொடுக்­கின்­றது. ஆண்டு தோறும் வரு­வதால் பெரு­நாட்­க­ளுக்கு இவ்­வாறு பெயர் வந்­தது. இஸ்­லாத்தில் வரு­டத்­துக்கு ஈதுல் பித்ர், ஈதுல் அழ்ஹா எனும் இரண்டு பெரு­நாட்கள் மட்­டுமே அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளன. நோன்பு, ஹஜ் எனும் இரு இபா­தத்­க­ளுக்குப் பின்னர் அல்லாஹ் இப்­பெ­ரு­நாட்­களை ஆக்­கி­யி­ருப்­பது பெரு­நாட்­களின் நோக்­கத்தை தெளி­வு­ப­டுத்­து­கின்­றன. அல்­லாஹ்­வுக்கு நன்றி செலுத்­து­வதும் மக்கள் சந்­தோ­ச­மாக பொழுதைக் கழிப்­பதும் சமூக உற­வு­களை வலுப்­ப­டுத்­து­வதும் பெரு­நாட்­களின் நோக்­கங்­க­ளாகும். இஸ்­லாத்தில் பெருநாள் கொண்­டா­டு­வதும் இபா­தத்தே ஆகும். மார்க்­கத்தில் அனு­ம­திக்­கப்­பட்ட வழி­மு­றை­க­ளுக்­கூ­டாக பெரு­நாட்­களை மகிழ்ச்­சி­யாக சிறப்­பாகக் கொண்­டாட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *