மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம்- டக்ளஸ் சுட்டிக்காட்டு..!

மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்கப்பட வேண்டுமென்பதே எமது நோக்கம் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வலி வடக்கு பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னரான இன்றைய சூழலுக்கேற்ற பொறிமுறைகளுடன் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கட்டமைப்புக்கள் மறுசீரமைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தற்போது உள்ளூர் அதிகார சபை தேர்தல் வந்துள்ளது. இது பிரதேசங்களின் அபிவிருத்திக்கான ஒரு தேர்தல்.

இது மக்களின் தேவைகளை முன்னிறுத்திய ஒன்றாக இருப்பதால் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை வெற்றிபெறச் செய்வது அவசியமாகும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *