
மியன்மாரில் கடந்த வாரம் ஏற்பட்ட பூமியதிர்ச்சியால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ உதவிகளுடன், ஒரு மில்லியன் டொலர் நிதி உதவியையும் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த பூமி அதிர்ச்சியால் மியன்மார் மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், தற்போது 2,700 பேர் வரை உயிர் நீத்துள்ளமையை சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன், அதிகளவானோர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் பலர் விபத்துக்களில் சிக்குண்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.