
பேருவளை மருதானை அரப் வீதியைச் சேர்ந்த மூத்த சமூக சேவையாளரும் அகில இலங்கை சமாதான நீதிவானுமான எம்.ஜே.எம் நிஸாம் ஹாஜியார் (வயது 81) 30ஆம் திகதி இரவு காலமானார். மூன்று ஆண் பிள்ளைகளுக்கும், மூன்று பெண் பிள்ளைகளுக்கும் தந்தையான இவர் பேருவளை அப்ரார் கல்வி நிலைய தலைவராவார். ஓய்வு பெற்ற முஸ்லிம் விவாகப் பதிவாளரான இவர் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன உறுப்பினராகவும், களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளன மூத்த உறுப்பினரும் ஷாதுலிய்யாத் தரீக்காவின் முகத்தமுஷ்ஷாதுலியுமாவார்.