சக சட்டத்தரணியை காப்பாற்ற துணிந்த சட்­டத்­த­ரணி நதிஹா அப்பாஸ்!

ஒரு விடு­முறை தினத்தில், மேன் முறை­யீட்டு நீதி­மன்ற கத­வுகள் திறக்­கப்­பட்டு அவ­ச­ர­மாக ஒரு வழக்கு தொடர்பில் உத்­த­ர­வுகள் பிறப்­பிக்­கப்­பட்ட மிக அரி­தான சம்­பவம் கடந்த நோன்புப் பெருநாள் தினத்­தன்று நடந்­தது. புத்­தளம் மேல் நீதி­மன்றால் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட சட்­டத்­த­ரணி பிரி­யங்கா உத­யங்­கனி சம­ர­துங்­கவை சிறை அறை­க­ளுக்குள் இருந்து மீட்க நடந்த போராட்­டமே அது. இந்த போராட்­டத்தின் ஆரம்ப புள்ளி அல்­லது அச்­சாணி ஒரு துணிச்சல் மிக்க சட்­டத்­த­ர­ணியின் நீதிக்­கான போராட்­ட­மாகும். புத்­தளம் நீதி­மன்றில் அத்­தனை சட்­டத்­த­ர­ணி­களும் கை விரிக்க துணிச்­ச­லாக தனது சக தோழிக்­காக நீதி கோரி போரா­டிய சட்­டத்­த­ரணி நதிஹா அப்பாஸ் தொடர்பில் இன்று நாடே பேசு­கி­றது. அவ­ரது அந்த போராட்­டமே இறு­தியில் விடு­முறை தினத்­திலும் மேன் முறை­யீட்டு நீதி­மன்ற கத­வு­களை திறக்கச் செய்­தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *