பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முஸ்லிம் இளைஞரான லியாவுதீன் முகம்மது ருஷ்தி நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேலுக்கு எதிரான வார்த்தைகள் அடங்கிய ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்ட போதிலும் அவர் மீது எந்தவித குற்றப்பத்திரமும் தாக்கல் செய்யப்படாமலேயே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையொப்பமிட்ட பயங்கரவாத தடைச்சத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவுப் பத்திரம் சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிவந்ததைத் தொடர்ந்து பலரும் கடுமையாக விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *