
அரச அதிகாரிகள் அவர்களது செயற்திறனின்மை மற்றும் தோல்வி என்பவற்றை மறைத்துக்கொள்வதற்கு ‘அரசியல் ஊழலை’ ஒரு கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது என வலியுறுத்தியிருக்கும் முன்னாள் வெளிவிகார அமைச்சர் அலி சப்ரி, அரச அதிகாரிகள் எவ்வித அச்சமும், பக்கச்சார்புமின்றி அவர்களது பணிகளை முன்னெடுப்பார்களாயின், எந்தவொரு அரசியல்வாதியினாலும் அரச சொத்துக்களைக் கொள்ளையிடமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.