மகிந்த மற்றும் ரணில் இருவர் மீதும் அநுர அரசு கை வைக்காது – குற்றம்சாட்டும் சாமர

 

கொள்ளையர்களைப் பிடிப்பதாக பெருமை பேசினாலும் இந்த அரசாங்கம், மகிந்த ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவர் மீதும் கை வைக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று (10) அவர் இதனைகள் குறிப்பிட்டுள்ளார்.

“பெரிய மீன்களுக்குப் பதிலாக சில சிறிய மீன்களை மட்டுமே பிடிப்பீர்கள்” அந்த வகையில் தற்போதைய அரசாங்கம் கைது செய்த ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் தாம் மட்டுமே என்று தசநாயக்க கூறியுள்ளார்.

1987 ஆம் ஆண்டுகளில் பதுளை – பெரகல தடுப்பு முகாம் மிகவும் ஆபத்தானதாக செயற்பட்டது.

இருப்பினும் அரசாங்கம் பட்டலந்தவை மட்டுமே தொடர்ந்து கூறி வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *