தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிப்பு

கடந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுவதாக லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த ஆண்டு 477 மில்லியன் தேங்காய்கள் அறுவடை செய்யப்பட்டதாக தெரிவித்த லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜெயவீர இந்த வருடம் 555 மில்லியன் தேங்காய் அறுவடை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் தெங்கு முக்கோண வலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு தேங்காயின் விலை சுமார் 163 ரூபாவாக நிலையாக உள்ளெதனவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *