
நாட்டில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தினமும் ஏதாவதொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான செய்திகளே வந்தவண்ணமுள்ளன. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 8 மாதங்களில் நாட்டில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இவற்றில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.