
காஸாவில் மனிதப் படுகொலைகளிலும் இனச்சுத்திகரிப்பிலும் ஈடுபடும் இஸ்ரேலிய படையினர் ஓய்வெடுக்கின்ற மற்றும் பொழுதுபோக்குகின்ற இடமாக இலங்கை மாறியிருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே இதற்கான அனுமதியை வழங்கினார். இப்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் இதே அனுமதியை தொடர்ந்தும் வழங்கிக் கொண்டிருக்கிறார் என இராஜதந்திரியும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக தெரிவித்தார்.