பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்..!

தென்னிந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் சந்தோஷ் நாராயணன், அவரது துணைவி மீனாட்சி சந்தோஷ் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் இன்றையதினம்(22) பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இதன்போது அவர்கள் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்தோஷ் நாராயணன் திடீரென இலங்கை வந்திருப்பதற்கான காரணம் எவையும் வெளியாகவில்லை.

அதேவேளை சந்தோஷ் நாராயணன் பாராளுமன்றில் எம்.பிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *