நீர்கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்பம்..!

நீர்கொழும்பில் கிறிஸ்தவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சிங்கள ராவய அமைப்பை சேர்ந்த சிலர் அங்கு கூடி தேசிய கொடிகளை தாங்கியவாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் விதமாக கோசங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

அதேவேளை நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட மண்டபத்திற்குள் மே கலந்துரையாடலைத் தொடர்ந்து பொதுவெளியில் சுடர் ஏற்றுவதற்கு ஆயத்தமாக இருந்த வேளை சிங்கள ராவய அமைப்பினரின் அச்சுறுத்தலோடு எனக்கு ஏதிராக நீதிமன்ற தடையும் கிடைத்ததால் எல்லாம் தடைப்பட்டு விட்டதாகவும் விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளதாகவும் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

\\

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *