களிமண் களத்தின் ராஜாவிற்கு பிரியாவிடை

பிரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான முதல் நாளில் முன்னாள் டென்னிஸ் ஜாம்பவானான ரபெய்ல் நடாலுக்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது. அரங்கம் முழூவதும் டென்னிஸ் ரசிகர்கள், பிரபலங்கள் புடை சூழ 20 ஆண்டுகளாக டென்னிஸ் துறையில் ஸ்பெய்ன் வீரர் ரபாய்ல் நடால் ஆற்றிய சேவையை பராட்டி அவருக்கு இந்த பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 14 முறை பிரன்ச் பகிரங்க தொடரில் சம்பியன் பட்டம் பெற்றவர் தான் நடால். களிமன் தரையின் காளை என வர்ணிக்கப்பட்ட நடால் டென்னில் அரங்கில் அசைக்கமுடியா சம்பியனாக வலம் வந்தவர்.

தனிநபர் விளையாட்டுகளில் அதிக முக்கியத்துவம் கொண்டதாக இன்று வரையிலும் திகழ்கிறது டென்னிஸ். கடந்த 20 வருடங்களாக ஆண்களுக்கான டென்னிஸ் உலகை ஆட்சி செய்தவர்கள் என்றால் ரோஜர் பெடரர், ரபேல் நடால் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரின் பெயரைத் தான் சொல்ல வேண்டும். இவர்கள் மூவரும் “டென்னிஸ் விளையாட்டின் மும்மூர்த்திகள்” என்றே வர்ணிக்கலாம். அந்த அளவிற்கு மூவரும் மாறி மாறி பல கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர். இவர்களோடு சேர்த்து இந்த பிரியாவிடை நிகழ்வில் முன்னாள் டென்னிஸ் நட்சத்திரமான என்டி மரியும் கலந்து கொண்டார். இவர்கள் மூவரும் தான் அதிகளவான இறுதிப்போட்டிகளில் ரவெய்ல் நடாலை சந்தித்தவர்கள்.

2003 ஆம் ஆண்டு விம்பிள்டன் தொடரில் அறிமுகமான நடால், 2005 ஆம் ஆண்டு பிரெஞ்சு பகிரங்க தொடரில் தான் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அரையிறுதியில் ரோஜர் பெடரரையும், இறுதிப்போட்டியில் மரியனோவையும் வீழ்த்தினார். தொடர்ந்து 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வரிசையாக பிரெஞ்சு பகிரங்க பட்டத்தை வென்று அசத்தினார். 20 வயதிற்குள்ளேயே 16 ஏடிபி டுவர் பட்டங்களை வென்று அசத்தினார் ரபேல் நடால். மேலும் 2008 இல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்று தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய பகிரங்க பட்டத்தை 2009 ஆம் ஆண்டிலும், அமெரிக்க பகிரங்க பட்டத்தை 2010 ஆம் ஆண்டிலும் கைப்பற்றினார்.

இதுவரையில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், இரண்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும், 92 ஏடிபி தொடர் பட்டங்களையும் வென்றிருக்கிறார் நடால். “களிமண் களத்தின் ராஜா” என அழைக்கப்படும் ரபேல் நடால், களத்தில் இறங்கினால் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக வைத்திருப்பார். 38 வயதான நடால், கொரோனா காலகட்டத்தில் சில காலங்கள் ஓய்வை எடுத்துக் கொண்டார். அதன் பின் களத்திற்கு திரும்பிய நடால், ஒருசில போட்டிகளை வென்றாலும், வெற்றி சதவிகிதம் குறையத் தொடங்கியது. இதற்கு மேல் விளையாட தனது உடல் ஒத்துழைக்காது என்பதை உணர்ந்து, 2024 ஆம் ஆண்டு டேவிஸ் கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் நடால். தான் விளையாடிய கடைசி போட்டியில் தோல்வியைப் பெற்றாலும், ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கும் ரபேல் நடால், இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த டென்னிஸ் வீரர் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.

டேவிஸ் கோப்பையுடன் ஓய்வினை அறிவித்திருந்த நடாலை கௌரவிக்கும் முகமாகதான் பிரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடர் ஆரம்பமான முதல் நாள் அவருக்கு சிறப்பு பிரியாவிடை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு அவருக்கு நினைவு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது. அதிலும் பிரன்ச் களிமன் தரை ஆடுகளத்தில் காளையாக திகழ்ந்த கௌரவிக்கும் முகமாக அந்த மைதானத்தில் நிரந்தரமாக மைதானத்தின் ஆடுகளத்தில் ரபெய்ல் நடாலின் கால் தடத்தை பதித்து நடாலுக்கு மறக்க முடியாத வாழ்நாள் பரிசை டென்னிஸ் நிரிவாகம் பரிசாக அளித்தது. அந்த தருணத்தில் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் நடால் கண்ணீர் மல்க அழூதார். இதுவரை டென்னிஸ் வீரர் ஒருவருக்கு கிடைக்காத வண்ணம் சிறந்ததொரு பிரியாவிடையை ஏற்பாடு செய்திருந்தார்கள் டென்னிஸ் சங்கம் என்பதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *