ஆனையிறவு உப்பள பணியாளர்களின் போராட்டம் நிறைவு; விரைவில் ஆனையிறவு உப்பு விநியோகம்!

ஆனையிறவு உப்பளத்தில் கடந்த மே மாதம் 13 ஆம் திகதியிலிருந்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டமானது நேற்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

உப்பு உற்பத்தி நிறுவனத்தின் முகாமையாளர் எம் .ஜே பி துவான் மன்சில் உப்பு உற்பத்தி கூட்டத்தாபனத்தின் இயக்குனர் சபையைச் சேர்ந்த வு. நந்தனன் ஆகியோர் நேற்றைய தினம்  போராட்டத்தில் ஈடுபட்ட பருவ கால பணியாளர்களை நேரடியாக அழைத்து பல மணி நேர கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர் 

இதன்போது தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளான 

பாதுகாப்பு உடைகள் , மருத்துவ வசதிகள் , பணி புரியும் நேரத்தில் நோய்தாக்கம் ஏற்படுமாயின் மருத்துவ சான்று பெற்றிருப்பின் அவர்களுக்கான முழுமையான ஊதியம் போன்றவை வழங்கப்படும் எனவும் 

மேலும் தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட 10 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், தெரிவிக்கப்ட்டது. 

அத்துடன் அவர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றாக, குறித்த முகாமையாளரை மாற்றுவது தொடர்பில்,  முகாமையாளர் மீதுகூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள்  ஆதாரம் அற்றவை எனவும் இதில் எந்தவித உண்மைத் தன்மை தன்மையும் இல்லை எனவும் தனிப்பட்ட ஒரு சிலரது விருப்பு வெறுப்புகளுக்காக முகாமையாளரை மாற்ற முடியாது எனவும் முகாமையாளரை மாற்றுவது தவிர்ந்த ஏனைய விடயங்கள் அனைத்திலும் கவனம் செலுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தீர்வு பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும் என தீர்வு வழங்கப்பட்டது. 

அமனடிப்படையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் எதிர்வரும் நாட்களில் பணிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர் 

அதிகாரி மேலும் தெரிவிக்கையில்

தற்பொழுது ஆனையிறவு உப்பளத்தின் உப்பின் பெயர் ரஜ லுனு என்ற பெயரை மாற்றி இனிவரும் காலங்களில் ஆனையிரவு உப்பு என்ற பெயரில் உப்பை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்து வருவதாகவும் மிக விரைவில் ஆனையிரவு உப்பளத்தின் உப்பை அனைவரும் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு அமையும் என தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *