யாழில் ஊடகவியலாளர் உட்பட 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதாவது, சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த இளம் ஊடகவியலாளர் ஞானப்பிரகாசம் பிரகாஷ் (வயது-26) வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

மேலும், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நெடுந்தீவைச் சேர்ந்த (70 வயது) ஆண் ஒருவரும் பருத்தித்துறையைச் சேர்ந்த (72 வயது) ஆண் ஒருவரும் கந்தர்மடத்தைச் சேர்ந்த (79 வயது) ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அதேபோன்று அல்வாயைச் சேர்ந்த (75 வயது) ஆண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில், சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில்  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை வைத்தியசாலையில் உயிரிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 265ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *