மன்னாரில் மேலும் 21 பேருக்கு கொரோனா- வயோதிபர் மரணம்

மன்னாரில் புதிதாக 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு கொரோனா மரணம் பதிவாகியுள்ளதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த  அறிக்கையில் வைத்தியர் ரி.வினோதன் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னார் மாவட்டத்தில்  புதிதாக 21 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வந்த மன்னார் முருங்கன் செட்டியார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த 67 வயதுடைய வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதன்படி மாவட்டத்தில் கொரோனா  வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

மன்னார் மாவட்டத்தில் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 704 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *