கோட்டா கோ கம போன்று, அனுர கோ கம ஒரு போதும் உருவாகாது எனவும் அது உருவாக்கப்பட்டால், அதை அரசியல்வாதிகள் அல்லாது, மக்களே உருவாக்க வேண்டும் எனவும் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை மக்கள் போய்விடுங்கள் என்று சொன்னால், தோழர் அனுர ஒரு கணம் கூட தங்கமாட்டார் எனவும், நம்மில் யாரும் ஒரு கணம் கூட தங்க மாட்டோம்.
நாம் இங்கு மகிழ்ச்சிக்காக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பெல்வத்தையில் உள்ள செவனகல கரும்பு விவசாயிகளுக்கு இரண்டு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று கூறி, அங்கும் ஒரு கிராமத்தை உருவாக்க முயன்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.