பெருமளவு ஹெரோயினுடன் பிடிபட்ட வெளிநாட்டு கப்பல்

இலங்கையின் தெற்கே சர்வதேச கடல் பகுதியில் பெருமளவு ஹெரோயின் கடத்தி வந்த வெளிநாட்டு மீன்பிடி கப்பல் மற்றும் 7 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்துள்ளது.

இலங்கை காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கடந்த சில தினங்களாக இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது போதைப்பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார்.

கடற்படை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் சந்தேக நபர்கள் மற்றும் கப்பல் பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *