இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் ரஷ்யா

ரஷ்ய விமான சேவை நிறுவனமான எரோஃப்ளொட், (Aeroflot) இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை எரோஃப்ளொட் ஆரம்பிக்கவுள்ளது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ரஷ்யாவின் எரோஃப்ளொட் விமான நிறுவனத்துக்கும் இலங்கையின் விமான நிறுவனங்களின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ரஷ்ய எரோஃப்ளொட் நிறுவனம், நேற்று முதல் இலங்கைக்கான விமான சேவைகளை முன்னெடுக்க திட்டமிட்டிருந்தது. ஆனாலும் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக இந்த தீர்மானம் பிற்போட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *