
தென் கடற்பிராந்தியத்தில் படகில் இருந்து 300 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
301 பொதிகளில் இருந்து ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்ன தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுடன் வௌிநாட்டவர்கள் ஏழு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய, கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கடந்த சில நாட்களாக முன்னெடுத்த விசேட நடவடிக்கையினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக, கடற்படை ஊடகப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா கூறினார்.
அவர்கள் பயன்படுத்திய படகும், கடற்படை கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
“கொழும்பு தமிழின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/colombotamil
Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் கொழும்பு தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Tamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது கொழும்பு தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்.




