ஹிஜாப்பிற்கான தடை உத்தரவு தொடரும் – கர்நாடக உயர் நீதிமன்றம்!

ஹிஜாப் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும் வரை  மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

ஹிஜாப் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகளான கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் முன்னிலையில், விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன.

இதன்போது  தீர்ப்பு வரும் வரை  மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்லத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

அதேநேரம் ஹிஜாப் விவகாரம் குறித்த பல்வேறு மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்துள்ளதுடன்,  அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே எனவும், ஹிஜாப்பிற்கான தடை உத்தரவு தொடரும் எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *