
கொழும்பு, மார்ச் 15
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இன்று இடம்பெறவிருந்த சந்திப்பு 25 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கான அழுத்தத்தை பிரயோகிக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் கூட்டமைப்பு உள்ளிட்ட 07 கட்சிகள் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற இருந்த நிலையில் சந்திப்பு ஒத்திவைக்கபட்டுள்ளது.