
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவன் அரவிந்தன் அபிரான் மாவட்ட மட்டத்தில் முதல்நிலை சித்தியை பெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டிற்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் அண்மையில் வெளிவந்திருந்தது.
அதனடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியால மாணவன் அரவிந்தன் அபிரான் 192 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதல்நிலை சித்தியினை பெற்றுள்ளார்.
அவருக்கு பாடசாலை சமூகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றது.