நடத்துநர் இல்லா பேருந்துகள்! அமைச்சர் வெளியிட்ட தகவல்

நடத்துநர்கள் இல்லா பேருந்துகளை உருவாக்க தேவையான தொழில்நுட்ப வேலைகளை செய்து வருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பேருந்து பிரயாணங்களின் போது பயன்படுத்த புதிதாக பேருந்து அட்டையை எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் மக்கள் பேருந்துகளில் பயணிக்கும் போது மீதி சில்லறை பெற்றுக்கொள்வதில் ஏற்படும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.

பாரஊர்த்திகள், முச்சக்கர வண்டிகள் போன்றவற்றின் கட்டணங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *