
கிராமப்புற வீதிகளில் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்தார்.
இதற்கு தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே காரணம்.
மிக அவசியமான நேரங்களில் மாத்திரம் பயண ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.