நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் பசில்! ஆளும்கட்சி எம்.பி. தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பக்கூடிய ஒரே நபர் பசில் ராஜபக்ஸ என்பதால்தான் சிலர் அவரை விமர்சித்து வருவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட இருவரை தவிர, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் அனைத்தும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி செயற்பட்டு வருகின்றனர்.

அரசாங்கத்தை விமர்சிக்கும் 11 பங்காளிக் கட்சிகள் என சிலர் அரசாங்கத்தை வரையறுத்தாலும் உண்மையில் அந்தக் குழுவில் 11 கட்சிகள் இல்லை.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு எமது கட்சி எப்போதும் முயற்சிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *