புதிய ஆணையாளராக பொறியியலாளர் சிவலிங்கம் இன்று பதவியேற்பு

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் பொருளியலாளர் என்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான இவர், இன்று (16) பதவியேற்கின்றார். முன்னாள் ஆணையாளர் ஊழல் குற்றச்சாட்டுகளின் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதால் அந்த வெற்றிடத்தை விளக்குவதற்காக, காரைதீவை சேர்ந்த பொருளியலாளர் என். சிவலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.கல்முனை மாநகர சபை வரலாற்றில் ஆணையாளராக பதவியேற்கும் முதல் தமிழ் அதிகாரி என்.சிவலிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *