நெருக்கடியின் அடையாளச் சின்னமாக மாறிய பசில்! – அமைச்சர் சுட்டிக்காட்டு

நாட்டின் தற்போதைய நெருக்கடியின் அடையாளச் சின்னமாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச திகழ்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தில் இருக்கிறேன் என்று கூற முடியாது. அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லவில்லை. அமைச்சு விவகாரங்களில் பங்கேற்க மாட்டேன். இன்னும் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்படாததால் அரசாங்கத்தில் இருந்து வெளியேறவில்லை என கூற முடியாது.

நிதியமைச்சர் பசில் ராஜபக்சவே நாட்டில் நெருக்கடியின் சின்னமாக திகழ்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *