வளப்பற்றாக்குறையுடன் கற்ற மாணவன் மூதூர் கல்வி வலயத்தில் முதலிடம்

வெளியாகிய 05 ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் திஃமூஃ பள்ளிக்குடியிருப்பு கலை மகள் இந்துக் கல்லூரி மாணவன் பரமேஸ்வரன் அர்த்தனன் 184 புள்ளிகளை பெற்று மூதூர் கல்வி வலயத்தில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளதோடு இதன் மூலம் தனது கிராமத்திற்கும், பாடசாலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளார்.

பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் காணப்படும் இப்பாடசாலை மாணவனின் வெற்றியானது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

இம்மாணவனின் வெற்றியில் உறுதுணையாக இருந்த கல்லூரி அதிபர் க.பாக்கிராஜா, கற்பித்த ஆசிரியர் ம.சிவகரன் மற்றும் நிர்வாகத்திற்கும் பெற்றோர்களும், கிராம மக்களும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *