
பொருளாதார நெருக்கடியை விடவும், நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமை ஆபத்தானது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனநாயக அரசியல் நெறிமுறைகளை முன்கொண்டு செல்ல ஜனாதிபதி தவறிவிட்டார். அரசாங்கத்தை ஆட்சி பீடம் ஏற்றிய தரப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.
நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிகளை விடவும், அரசியல் நெருக்கடிகள் மிகவும் பாரதூரமானது.
அரசியல் தீர்மானங்கள் குடும்ப உணவு மேசையில் எடுப்பதனால் இவ்வாறான விளைவுகள் ஏற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.