
முல்லை, மார்ச் 16
முல்லைத்தீவு – பறங்கியாற்று பகுதியில், அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி, மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரதும் இரு உழவு வண்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நட்டாங்கண்டல் பொலிஸ்க்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட உழவு வண்டிகள், பொலிஸ் தடுப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் இருவரும், பொலிஸாரால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.