கலாஓயாவில் விழுந்து வனவிலங்கு திணைக்கள அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

பாலம் உடைந்துள்ளமையினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலத்திலிருந்து நேற்று பிற்பகல் தவறுதலாக வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.

இதனையடுத்து கங்கைவாடி கடற்படை சுழியோடிகள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிஸார் இணைந்து தேடியுள்ளனர். இதன்போது குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வில்பத்து சரணாலயத்தில் பணிபுரியும் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ரத்னாயக்க என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்திய அதிகாரி தெரிவித்தனர்.

குறித்த சடலம் புத்தளம் நகரசபை எல்லைக்குரிய சேனைக்குடியிருப்பு மையவாடியில் அடக்கம் செய்யப்படவுள்ளதாக வைத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தளம் நகரசபை எல்லைக்குள் இரண்டாவது கொரோனா தொற்றாளர் அடக்கம் செய்யப்படவுள்ளதாக வைத்திய அதிகாரி மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *