
நல்லாட்சி அரசு இருந்திருந்தால் இன்று எண்ணெய் விலை ரூ.126 ஆகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 130 ஆகவும் காணப்படும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
“சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தற்போது 98 டாலர்கள். அப்படியென்றால், நாட்டில் எரிபொருளின் மீதான கலால் வரி மூலம் இந்த அரசு மக்களிடம் இருந்து எவ்வளவு பணத்தை பிடுங்குகிறது என்பது நாட்டு மக்களுக்கு புரியும். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு கூடுதலாக உள்ளது. வரிக்கு கூடுதலாக பணம் சம்பாதிக்கிறார்கள்.
மேலும், அரசின் தவறான நிதி நிர்வாகத்தால், மறுபுறம் மக்கள் இதற்கு இழப்பீடு வழங்க வேண்டியுள்ளது. அத்துடன், இலங்கையில் இவ்வாறு பெற்றோல், டீசல், கச்சா எண்ணெய் போன்றவற்றை இறக்குமதி செய்ய முடியாது. ஏனெனில் இந்த ரீலோட் சிஸ்டம் இதை கொஞ்சம் கொஞ்சமாக செய்ய வழியில்லை. அதற்கு ஒரு நிலையான வேலைத்திட்டம் நாட்டுக்கு தேவை.
அதைச் செய்ய இந்த அரசு தவறிவிட்டது. எனவே, எரிவாயு வரிசைகளிலும், பெற்றோல் வரிசைகளிலும், டீசல் வரிசைகளிலும் தவிக்கும் மக்கள் தற்போது முன் வந்து தமது வாழ்வுரிமைக்காக எழுந்து நிற்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.