சுழிபுரம் பறாளை முருகன் கோவிலில் விகாரை அமைக்க விடமாட்டோம்! – மக்கள் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் – பறாளை முருகன் ஆலயத்தில் பௌத்த விகாரை அமைக்க தடை விதித்து இன்றைய மக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மக்கள் சமூகம் மீடியாவுக்கு கருத்து தெரிவிக்கையில்:

பறாளை முருகன் கோவிலுக்கு அருகில் விகாரை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து ஆலய நிர்வாகத்துடன் பொது மக்கள் இணைந்து இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டோம். இதிலே தீர்க்கமான முடிவொன்றை எடுத்துள்ளோம்.

இங்கே மதச் சின்னங்களை நிறுவ அனுமதி கிடையாது, அத்துடன் பிரித்தோதும் செயற்பாட்டுக்கும் இடமில்லை. அதையும் மீறி முயற்சி செய்தால் அதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிப்போம்.

இந்த ஆலயம் 1998 ஆம் ஆண்டு மாதகலில் இருந்து, குண்டு வீசி இராணுவத்தினர் தகர்த்திருந்தனர். அதன் பின்னர் 1996 ஆம் ஆண்டளவில் மக்கள் ஒன்று சேர்ந்து இந்த ஆலயத்தை புனரமைத்தோம்.

அப்போது குண்டு வீசி அழித்தவர்கள், இன்று சர்வமதம், நல்லெண்ணம் என்று தெரிவித்து இங்கே எப்படி வருகிறார்கள் என்று தெரியவில்லை.- என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *