பதவிக்கு தகுதியற்றவர் பசில் – தாக்கல் செய்யப்பட்டது மனு: நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு!

அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் நிதியமைச்சர் ஆகிய பதவிகளை வகிக்க சட்டரீதியாக எந்தத் தகைமைகளும் இல்லையென தெரிவித்து மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதி நீதிமன்றுக்கு விளக்கமளிக்க மீண்டும் அறிவித்தல் அனுப்புமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகருணா முன்னிலையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன் போது மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ஷ, பிரதிவாதி பசில் ராஜபக்ஷவிடம் முன்னர் அறிவித்தல் கையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எனினும், வழக்கு இன்று அழைக்கப்பட்ட போது அமைச்சர் பசில் ராஜபக்ஷவோ அல்லது அவரது சட்டத்தரணியோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.

இந்நிலையில், குறித்த வழக்கின் முதலாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு மீண்டும் அறிவித்தல் அனுப்பி, வழக்கை எதிர்வரும் மே மாதம் 12 ஆம் திகதிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த மனு, உலப்பனே சுமங்கல தேரர் மற்றும் பாரிய மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர் லசில் டி சில்வா ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *