ஹோட்டல் என்ற போர்வையில் இயங்கிவந்த விபச்சார விடுதி முற்றுகை!

தம்புத்தேகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈரியாகம பிரதேசத்தில் ஹோட்டல் என்ற பெயரில் இயங்கிவந்த விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதியை நடத்தி சென்ற நபரும் விடுதியை நடத்தி செல்வதற்கு உடந்தையாக இருந்த பெண்கள் நால்வருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சவஸ்திபுர, அனுராதபுரம், கல்கமுவ, தம்புத்தேகம, மதவாச்சிய ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 52, 32, 42 மற்றும் 44 வயதுகளையுடையவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *