
இலங்கை மீனவர்கள் ஆறுபேர் பயணித்த மீன்பிடி படகு ஒன்று இந்திய கடலோர காவல் படையினரால் இன்று மாலை பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் தூத்துக்குடி கடற்பரப்பில் பயணித்த இந்திய கப்பலே இலங்கை மீனவர்களை கைது செய்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை 10 மணிக்கு பின்பே துறைமுகத்திற்கு அழைத்து வரப்படுவார்கள் என தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.