
எதிர்காலத்தில் போசனை குறைவாக குழந்தைகள் பிறக்கும் அபாய சந்தர்ப்பம் உருவாகி வருவதாக லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் இன்று பொருளாதார பாதிப்பு காணப்படுகிறது.
உதாரணமாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு வருகின்ற சில பொருட்களின் விலை 1500 ஆக அதிகரித்திருந்தது.
1972, 1973 ம் ஆண்டுகளில் ஏற்பட்டது போல இன்று நாட்டில் பொருளாதார பாதிப்பு காணப்படுகிறது.
அப்போது நிதி அமைச்சர் கடன் பிரச்சினையில் இருந்து நாட்டை விடுவித்தார்.
ஆனால் இன்று நிதி அமைச்சரினாலே இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல டொலர் பெறுமதி பில்லியன் 8 இருந்த சந்தர்ப்பத்தில் மில்லியன் 600 டொலர்கள் கூட இல்லாமல் காணப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மருந்து தட்டுப்பாடு காரணமாக நான் வைத்தியர் என்ற ரீதியில் வருத்தப்படுகிறேன்.
அதேபோல பொருட்களின் விலையும் எல்லையற்ற நிலையில் உயர்வாக காணப்படுகிறது.
எதிர்காலத்தில் மந்த போசனை குறைவாக குழந்தைகள் பிறக்கின்ற சந்தர்ப்பமும் உருவாகிறது.
எனவே இது தான் நம் நாடு முகம் கொடுக்கின்ற நிலைமை- என்றார்.