
யாழ்ப்பாணம், மார்ச் 17
இலங்கையில் ஆடு, மாடுகளுக்கான விலையே இலட்சக் கணக்கில் இருக்கின்றபோது ஒரு மனித உயிருக்கு ஒரு இலட் சம் ரூபா நட்டீடு என்பதிலிருந்து சிங்கள ஆளும் வர்க்கத்தினர் தமிழ் மக்களை எவ்வளவு தூரம் ஒரு கிள்ளுக்கீரை போல் எடைபோடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
இவ்வாறு ஈழமக்கள் புரட்சி கர விடுதலை முன்னணியின் தலைவர் க. சுரேஷ் பிறேமச் சந்திரன் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக் கையின் முழுமையான விவரம் வருமாறு:-
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற அமைச்சர வைக்கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு மரணச் சான்றிதழ் அல்லது எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை என்னும் சான்றிதழ் வழங்கப்ப டுவதுடன், நட்டீடாக ஒரு இலட் சம் ரூபா வழங்கப்படும் என அமைச்சரவை முடிவுசெய் துள் ளது என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் திரு விழாக்களிலோ, பொதுநிகழ்ச்சிகளிலோ அல்லது வழிதெரியாமல் தடுமாறி தொலைந்து போனவர்கள் அல்லர். இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் வேண்டுகோளுக்கிணங்க சரணடைந்தவர்களும் இராணுவச் சுற்றி வளைப்புகளின்போது பல பேர் முன்னி லையில் கைதுசெய்யப்பட்டவர்களும், இராணுவத்தினரின்கோரிக்கைக் கிணங்க உறவினர்களால் கையளிக்கப்பட்டவர்களும் இதில் அடங்குவர்.
ஆகவே, இவர்கள் எவ்வாறு காணாமல் போகமுடியும் என்பது முதலாவது கேள்வி. அரச படைகளிடமும், பொலிஸாரிட மும் புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்ப டைக்கப்பட்ட பிறகு எவ்வாறு காணாமல் போக முடியும்? இவர்கள் படைத்தரப் பினரால் கொலை செய்யப்பட்டார்களா என்ற அச்சம் அவர்களின் உறவினர்கள் மத்தியில் நிறையவே இருக்கின்றது.
ஆகவேதான் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரி நிற்கின்றார்கள். ஆனால், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புகளின் அழுத்தம் காரணமாக மரணச் சான்றிதழ் ஒன்றைக் கொடுத்து இந்த விவகாரத்தை முடித்துவிடலாம் என்று அரசு யோசிக்கின்றது. இதனைப் பாதிக்கப்பட்ட மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்போவது கிடையாது.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் சுமார் பத்து வருடங்க ளுக்கும் முன்னர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆள்கொணர்வு மனுவுக்கு இன்றுவரை நீதிவழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசின் இந்த அறிவிப்பால் எமது மக்கள் மிகவும் ஏமாற்றமடைந் துள்ளனர். பொறுப்புக்கூறல் நடவடிக்கை களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக, அரசு ஒரு பிழையான அணுகுமுறை யினூடாக இந்தப் பிரச்சினைக்கு முடிவைக்காண முனைகின்றது.
அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது எமது நோக்கமல்ல. ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசு தம்மிடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றிப் பொறுப்புக்கூறுவது இன் றியமையாதது. அதிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்வதும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஆகவே, இலங்கை அரசின் கபடத் தனமான நடவடிக்கைகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு இது தொடர்பான ஒரு சர்வதேச விசாரணையை சர்வதேச சமூகம் நடத்தியாக வேண்டும். அதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்க முடியும்.
இலங்கையில் ஆடு, மாடுகளுக்கான விலையே இலட்சக்கணக்கில் இருக்கின்றபோது ஒரு மனித உயிருக்கு ஒரு இலட் சம் ரூபா நட்டீடு என்பதிலிருந்து சிங்கள ஆளும் வர்க்கத்தினர் தமிழ் மக்களை எவ்வளவுதூரம் ஒரு கிள்ளுக்கீரை போல் எடைபோடுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
சர்வதேச விசாரணை ஒன்று நடக்கும் பட்சத்தில் சர்வதேச நியமங்களக்கு அமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதியும் கணிசமான அளவு நட்டீடும் கிடைக்க வாய்ப்பிருக்கின்றது. ஆகவே, இலங்கை அமைச்சரவையின் இந்தத் தீர்மானம் என்பது வெந்தபுண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே அமையும்.
இலங்கைத் தீவின் சமபங்காளிகளான தமிழ் மக்களின் உயிர்களையே மதிக்கத் தெரியாத இலங்கை அரசிடமி ருந்து தமிழ் மக்கள் அச்சமின்றியும் கெளரவத்துடனும் வாழ்வதற்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒரு மூன்றாந்தரப்பின் தலையீடின்றி சாத்தியமற்றது என்பது தெளிவாகின்றது.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டி ருக்கையிலேயே இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு மேற்கொள்கிறது என்றால் கூட்டத்தொடர் முடிந்தவுடன் எப்படி நடந்துகொள்ளும் என்பதை ஐ.நா. ம னித உரிமைகள் ஆணையகம் நினைத்துப் பார்க்கவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர் பான அமைச்சரவைத் தீர்மானம் என்பது குப்பைகூடைக்குள் போடுவதற்கே தகுதி யானது. அரசின் இந்த மோசமான நடவடிக் கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள், ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் இணைந்து கண்டிப்பதுடன் சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று கோருகின்றோம் என்றுள்ளது.