
கொழும்பு, மார்ச் 17
பெரும்பாலான உறவுகள் மரணச் சான்றிதழையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசிய பிராந்திய ஆய்வாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான தியாகி ருவன்பத்திரன தெரிவித்தார்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தில் ‘காணக் கிடைக்கவில்லை’ எனும் சான்றிதழைப் பெற்றுக்கொண்டவர்களின் குடும்ப மீள்வாழ்விற்காக ஒருமுறை மாத்திரம் ஒரு லட்சம் ரூபாயைச் செலுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அரசாங்கத்தின் குறித்த முடிவு தொடர்பாக தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், உள்ளக மற்றும் சர்வதேச ரீதியில் அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்களை வெளியிடுவதாக அவர் சுட்டிக்காட்டினார். காணாமல்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான குழுக்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினால் ஸ்தாபிக்கப்பட்டது என ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் உறுதியளித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இருப்பினும் காணாமல்போனோரின் பெரும்பாலான குடும் பங்கள் மரணச் சான்றிதழையோ இழப்பீட்டையோ எதிர்பார்க்கவில்லை என்றும் மாறாக அவர் கள் தமது அன்பிற்குரியவர் களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையே எதிர்பார்க் கின்றார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இதுவரை காணாமல்போ னோர் தொடர்பாக கிடைக் கப்பெற்றிருக்கும் 14 ஆயிரத்து 988 முறைப்பாடுகள் பற்றிய விசாரணைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக 25 விசாரணைக்குழுக்கள் நியமிக்க கடந்த வாரம் தீர்மானிக்கப்பட் டிருந்தமை குறிப்பிடத்தக்கது.