கிளிநொச்சியில் நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்

நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பமாவதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு அமைவாக இரண்டாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்ள கீழ்வரும் தடுப்பூசி நிலையங்களில் அருகில் உள்ள நிலையத்துக்கு சென்று மக்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியுமென அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம், புனித திரேசா பெண்கள் கல்லூரி, உருத்திரபுரம் ஆரம்ப வைத்தியசாலை, வட்டக்கச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மகாவித்தியாலயம், பாரதிபுரம் மகாவித்தியாலயம்,

புன்னை நீராவி அ.த.க. பாடசாலை, பிரமந்தனாறு கிராம சேவையாளர் அலுவலகம், தர்மபுரம் மத்திய கல்லூரி, கல்மடுநகர் அ.த.க. பாடசாலை, முருகானந்தா அ.த.க. பாடசாலை, பரந்தன் கிராம சேவையாளர் அலுவலகம்

முழங்காவில் வைத்தியசாலை, பூநகரி வைத்தியசாலை, வேவில் வைத்தியசாலை, பளை மத்திய கல்லூரி ஆகிய தடுப்பூசி நிலையங்களில் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மேலும் தடுப்பூசி செலுத்த செல்வோர் தடுப்பூசி அட்டைகளை எடுத்து செல்ல வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை முக கவசங்களை உரிய முறையில் அணிந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கொவிட் பரவலை கட்டுப்படுத்தவும், சுகாதார துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களிடம் அவர் வேண்டுகை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *