நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு தனியொரு நபர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது! – ஞானசார தேரர்

தேசத்தின் பிரச்சினைகள் குறித்து ஆராயாமல் தனியொரு நபர் மீது குற்றம்சாட்டுவது அர்த்தமற்ற விடயம் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை மூலம் நாட்டிற்கு கிடைத்த 15 பில்லியன் அமெரிக்க டொலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரும் கடந்த இரண்டு வருட கொரோனா காரணமாகவும் இல்லாமல்போயுள்ளது.

சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி நேரடியாக நாட்டின் பொருளாதாரத்தை பாதித்தது. கொரோனா மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக கையிருப்பில் இருந்த டொலர்கள் செலவு செய்யப்பட்டன.

அரசாங்கத்தை குற்றம்சாட்டும் அனேகமானவர்கள் நாட்டின் நெருக்கடியின் பின்னால் உள்ள உண்மை கதையை அறிந்துகொள்ளாதவர்கள்.

இதன் காரணமாக தற்போதைய விவகாரம் மேலும் குழப்பகரமானதாக மாறியுள்ளது, தனியொரு நபர் காரணமாகவே நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துள்ளது என சில குழுக்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட நபரை துரத்தியடித்தால் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சரிசெய்யலாம் என ஏனைய குழுக்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை தனியொரு நபர் தொடர்பானதில்லை. அவரை குற்றம்சாட்டுவது அபத்தமானது.

6.9 மில்லியன் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இந்த அரசாங்கத்தை அமைப்பதற்கான ஆணையை வழங்கினார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *