
புத்தளம் மஹகும்புக்கடவல ஹொரகஹயாய பகுதியிலுள்ள குளமொன்றில் மிதந்த நிலையில் நபர் ஒருவரின் சடலமொன்று நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது.
படபொல, கிதுல்கஹகல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
மஹகும்புக்கடவல ஹொரகஹயாய பகுதியிலுள்ள குளத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக மஹகும்புக்கடவல பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஆனமடுவ பதில் நீதவான், சம்பவ இடத்தில் நீதவான் மரண விசாரணையை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சடலத்தை புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மஹகும்புக்கடவல பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.