நாட்டை சீரான முறையில் முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு தமது நாடான அமெரிக்காவிற்கே செல்லுங்கள் என புத்தளம் நகர முச்சக்கர வண்டியின் சாரதிகள் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
சமூம் மீடியாவுக்கு புத்தளம் நகர முச்சக்கர வண்டியின் சாரதிகள் மேலும் தெரிவிக்கையில்,
பெற்றோல் விலையேற்றத்தினால் தற்பொழுது மக்கள் முச்சக்கர வண்டிகளில் பயணம் செய்வதற்கு வருகைத் தருவது குறைந்துள்ளதாகவும், அப்படி பொதுமக்களிடம் முச்சக்கர வாடகைப் பணம் கூடுதலாக கேட்டால் அவர்கள் தருவதில்லையெனவும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் 100 ரூபாவிற்கு அரவிடப்பட்ட ஹயர் தற்பொழுது 150 ரூபாவிற்கு அரவிடப்படுவதாகவும், 100 ரூபாவிற்கு இருந்த முச்சக்கர வண்டியின் உதிரிப்பாகங்கள் 400 ரூபாவிற்கு விக்கப்படுவதாகவும் இதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முச்சக்கர வண்டியின் சாரதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
உலக சந்தையில் பெற்றோலின் விலை கூடுகிறது என தெரிவித்து தமக்கு அநியாயம் செய்யவேண்டாம்.
பெற்றோலின் விலையேற்றம் ஏற்பட்டால் அரசாங்கத்தைப் போன்று தாமும் களவெடுக்கத் தான் வேண்டும். இல்லாவிட்டால் விஷத்தையருந்தி உயிரிழக்க வேண்டும்.
குறித்த அரசாங்கத்தால் நாட்டை சீரான முறையில் முன்னோக்கி கொண்டு செல்ல முடியாவிட்டால் நாட்டை வேறு ஒருவரிடம் கையளித்துவிட்டு உங்களது நாடான அமெரிக்காவிற்கே செல்லுங்கள் என முச்சக்கர வண்டியின் சாரதிகள் கடுமையாக எச்சரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

